Saturday, May 29, 2010

ஏப்ரல் 16-30, 2010





தலையங்கம்

இன்றைய தமிழகம் இனி உங்களுக்காக...


எண்ணற்ற பத்திரிகைகள் தமிழகத்தில் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே வளர்கின்றது. அவற்றில் துரதிருஷ்டமாகச் சில துதிபாடிகளாகவும் மாறிவிடுகின்றன.
இவ்வாறான நேரத்தில் ஒளியேற்றும் தீச்சுடர்போல், நேர்கொண்ட பார்வையோடு, நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெஞ்சோடு மக்களை நோக்கி ஒரு புதிய உதயத்தின் கடினப் பயணம்தான் ‘இன்றைய தமிழகத்தின்’ நோக்கம். இனி இது மக்களோடு கலந்து மக்களுக்காகப் பேசும்.
இன்று பிறக்கும் ‘இன்றைய தமிழகம்’ வளர்ச்சி அடைய உங்களின் பேராதரவை நாடுகிறோம்.
கடந்த மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளும், அதைத் தொடர்ந்து வரும் விமர்சனங்களும், அதோடு திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள்கள் காணாமல் போனதும் இன்றைய கல்வியின் தரத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.
அரசு மறுதேர்வு வைப்பது மட்டுமே ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கு வழி வகுக்காது. அனைத்துத் துறையிலும் உலகச் சூழலோடு போட்டி போடும் நாம், இதுபோன்ற கவனக்குறைவுகளை சரி செய்து, கல்வியின் தரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரத்தையே நிர்ணயிக்கக் கூடிய அடிப்படை அமைப்பான கல்வியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை நம் கல்வித்துறை ஏற்படுத்தவேண்டும். அதற்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தகுந்த இளைய சமுதாயத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

.......................................

கட்டுரை

ஜெயிக்கப் போவது யாரு
நல்லதம்பி


கோடிக்கணக்காகப் பணம் போட்டு எடுத்த படங்கள் எல்லாம் பார்க்க நாதியில்லாமல் அநாதையாய் தியேட்டரில் அல்லாடும் காலத்தில் சாமியார் நித்தி யானந்தா தமிழ் நடிகையுடன் கூடிக் குலவும் கொஞ்சல் காட்சிகள் சன் டிவி உபயோகத்தில் தமிழக மக்களின் வரவேற்பறையில் பலப்பல காட்சிகளைக் கண்டுவிட்டது. சரச சாமியார் நித்தியானந்தா போல் எத்தனையெத்தனை சாமியார்கள் இப்படி கையும் களவுமாக மாட்டினாலும் சாமியார் பின்னால் போகும் கூட்டம் திருந்தவா போகிறது? பணம் கொட்டிக் கொழிக்கும் தொழில் சாமியார் தொழில். சுத்தமான காவியுடை. முகத்தில் மந்தகாசப் புன்னகை. வசியப்படுத்தும் வசீகர மொழி. வேறென்ன வேண்டும்? சாமியார்கள் காட்டில் மழைதான். சில சமயங்களில் அல்ல, பல சமயங்களில் இந்த சாமியார்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. மகாநதி திரைப்படத்தில் ‘‘எப்படி ஒரு நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குது?’’ன்னு கதாநாயகன் ஆதங்கப்படுவதுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.
எப்படிப் பெண்கள் மிகச் சரியாக ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு ஏமாறுகிறார்களோ? ஆச்சரியமாக இருக்கிறது. தெரியாமல் ஏமாறுகிறார்களா, தெரிந்தே ஏமாறுகிறார்களா. ஒரு சாமியார் மாட்டிக்கொண்டால் தொடர்ந்து புகார்களை வாரியிறைக்கும் பெண்கள் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்? முகம் மழித்த சாமியார்கள், மொத்தத்தையும் அறுத்துக் கொண்டவர்கள் எனச் சமூகம் இன்னமும் நம்புகிறதா? பொதுவாக ஆன்மிகத்தில் அதிகப்படியான நாட்டம் கொண்டவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து இத்தகைய தடுமாற்றங்களுக்கு பின்னணிக் காரணமாக இருக்கலாமோ? கோவிலுக்குப் போகிறேன், சாமியாரைப் பார்க்கப் போகிறேன் எனும்போது யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரப்போவதில்லை என்பது ஒரு கவசமாக இருக்கிறதா? சொத்துகளை வாரிக்குவிப்பவன், சுகத்தில் மூழ்கித் திளைப்பவன் எப்படி முற்றும் துறக்க முடியும்? அவன் எப்படி நமது கஷ்டங்களை தீர்க்க முடியும்? ஆண்களோ பெண்களோ ஏதோவொரு எதிர்ப்பார்ப்போடு தானே சாமியார்களை நாடுகின்றனர். உண்மையான சாமியார்கள் இருக்கும் இடமே யாருக்கும் தெரியப் போவ தில்லை. நித்தியைப் போன்றவர்கள் இன்னும் எவ்வளவு பேர் உள்ளனர்? கூட்டத்தைச் சேர்க்கும் எல்லாச் சாமியார்களுமே ஒருவகையான அயோக்கியர்கள்தாம். மக்கள் விழித்துக் கொள் ளாதவரை இத்தகு சாமியார்கள் கதவைத் திறந்து கொண்டேதான் இருப்பார்கள்.
சாமியார்களின், பெண்களின் பாலியல் வேட்கைகளில் எந்தத் தப்புமில்லை. ஆனால் போலியான வேஷங்கள் எதற்காக... யாரை ஏமாற்ற... நம் சமூகத்தின் போலியான முகம் தொடர்ந்து பல வகைகளில் பொதுச் சபையில் கிழிந்து தொங்குகிறது. இதைப் போன்ற விஷயங்களில் புலனாய்வுப் பத்திரிகை களின் பங்கு மகத்தானது. கிளுகிளுப்பான காட்சி களை வழவழப்பாக வண்ணப்பக்கங்களில்
வாரி இறைத்துத் தம் கல்லாவை நிரப்பிக் கொள்ளும். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் நமது வரவேற்பறையில் பலான காட்சிகள் அரங்கேறுவதைப் பற்றி நமக்கு எந்த வருத்தமும் வரப்போவதில்லை. வடுமாங்காய் போன்ற பாடல்களை ஒலிக்க விட்டு குழந்தைகள் ஆடுவதை ரசிக்கும் தவறை நம்மில் யார் செய்யவில்லை? பாலியல் ரீதியான நமது போலித்தனங்கள் களையப் பட வேண்டியதை நாம் உணரப்போவது எப்போது? அதுவரை இதைப் போன்ற சாமியார் களின் கதை நமது ரகசிய ஆசைகளுக்குத் தீனி யாகவே வீசப்படுகிறது.
நித்தி மீது பாய்கிறார் கள். கைது செய்யச் சொல்லிக் கூப்பாடு போடுகிறார்கள். சட்டப் படி அவர் எந்தத் தவறும் செய்ததாகத் தெரிய வில்லை. அவருக்குப் பிடித்த பெண்ணோடு தனியறையில் அந்தப் பெண்ணின் விருப்பத் தோடு இருப்பதில் என்ன பிழை? தனது உடம் பானது அவருக்கான காணிக்கை என ரஞ்சிதா நினைத்திருக்கலாம். இது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களது அந்தரங் கத்தைப் படம் பிடித்து அதை அரங்கேற்றியது ஒரு வகையான ஊடக வன்முறை. ரஞ்சிதா வுக்கும் நித்திக்குமான காதல் கலந்த காம விளையாட்டை கடை பரப்பி தனது டி.ஆர்.பி.யை உயர்த்திக்கொண்டது சன் டிவி. தமிழ்க் கலாச்சாரம் பறிபோய்விட்டதாகப் பதறுகிறார்கள். அப்படியொன்று இருக் கிறதா என்ன? காமத்தை ஒழுக்கம் சார்ந்து பார்ப்பதால் வரும் பிழை இது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி ஏமாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பு குறித்து அவர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். சமூகமல்ல.

.......................................


தி.மு.க.வின் சவால் வெற்றி!

பென்னாகரம் இடைத்தேர்தலின் முடிவு கடந்த மார்ச் 31 அன்று  அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. சார்பில் வெற்றியை எய்திய இன்பசேகரனின் வாக்குகள் 77,687. அவருக்குப் பின்பு  இரண்டாவதாக வந்த பா.ம.க. வேட்பாளர் தமிழ்க்குமரனைவிட 36,402 வாக்குகள் அதிகம்.தொடர்ந்து திருமங்கலம், திருச்செந்து£ர்... இதோ பென்னாகரம் என அடுத்தடுத்து தி.மு.க. வெற்றி வாகையைச் சூடியதோடு எதிர்க்கட்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டேயிருக்கிறது. தி.மு.க.கட்சியின் வளர்ச்சி கூடிக்கொண்டே போகிறது.
அ.தி.மு.க வேட்பாளர் அன்பழகன் பெற்றிருக்கும் வாக்குகள் 26,778. டெபாசிட் டையே இழந்து மூன்றாவது இடத்திற்குத்  தள்ளப்பட்டுள்ளது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்  தோல்விக் கான காரணங்களையும் தம் சரிவிற்கான காரணங்களையும் ஆராய்ந்து கட்சிப் பணிகளை முடுக்கி வருகிறது அ.தி.மு.க.
இத்தொகுதியில் பா.ம.க. வேட்பாளரான ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் முற்றிலும் சாதி மக்கள் கணக்கைக் கொண்டு அவர்களின் ஆதரவை மட்டுமே  எடுத்துக்கொண்டு தேர்தலில் நிறுத்தப்பட்டார். எனினும் சாதியின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் மீறி  தி.மு.க.வே மீண்டும் வென்றுள்ளது என்பது தமிழக அரசியலில் மற்ற கட்சிகளைவிட தி.மு.க.வின் சமத்துவப் பண்பையே நிலைநிறுத்துவதாக உள்ளது.
தேர்தல் கமிஷனின் தீவிர கண்காணிப்பு, கெடுபிடிகள் மட்டுமன்றி பா.ம.க.வின் அதீத தேர்தல் பணிகளையும் மீறி வெற்றியை ஈட்டியிருக்கிறது தி.மு.க. அக் கட்சியின் சீரிய மக்கள் பணியே வெற்றிக்கு முழுக்காரணம் என்பது இவ் வெற்றி அறிவிக்கிறது.
அய்ந்தாம் முறையாக 2006ஆம் ஆண்டு ஆட்சியில்   அமர்ந்த   தி.மு.க. அதனை      யொட்டியும் அதன் பிறகும் அறிவித்த திட்டங்களும் சலுகைகளும் ஏராளம் என்பதோடு விலைவாசி ஏற்றம் போன்ற  பல்வேறு குறைபாடுகளையும்  மக்கள் கருத்தில் கொள்கிறார்கள். ஆனாலும் சமச்சீர் கல்வி, பழைய நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி படித்தோரிடையேயும், உயிரைக் காக்கும் கலைஞர் காப்பீடுத் திட்டம், பாமரரிடையேயும் நல்வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதோடு அடித்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு, இலவச கலர் டிவி, 1 ரூபாய் அரிசி, மலிவு விலை மளிகைப் பொருட்கள் என அவர்களை எளிதில் போய்ச்சேரும் சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது தி.மு.க. அரசு. இது பலவகைகளில் உதவி புரிந்து வெற்றி எய்தி கட்சியின் வளர்ச்சியையும் வருங்காலத்தின் நிலையையும் தெள்ளென விளக்குகின்றதைப் போல் தெரிகின்றன.
பென்னாகரம் இடைத்தேர்தலின் வேட்பாளரான இன்பசேகரனின் வெற்றி தி.மு.க. வுக்குக் கிடைத்த வெற்றிக்கனி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின்   ஒட்டுமொத்த ஆட்சி மீதுள்ள கனவையும் நம்பிக்கையையும் பின்னுக்குத் தள்ளி அவநம்பிக்கையையும் பயத்தையும் ஏற்படுத்தி யுள்ள துருப்புச் சீட்டு என்பதையே இவ்வெற்றி மீண்டும் அறிவிக்கிறது.


.......................................


அன்பழகன் பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டை புதிய சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பேரா. அன்பழகன் 2010-11ஆம் ஆண்டுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய, புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட் உரையை 130 நிமிடம் படித்தார்.
‘‘மாற்றுத்திறன் கொண்டவர்கள் நலத்திற்கென தனித்துறை தொடங்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்’’
‘‘யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ள நோயாளிகளுக்கு மாத உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும்.’’
‘‘தேனியில் ரூ.10 கோடி செலவில் சிறப்பு அரசு மனநல மருத்துவமனை கட்டப்படும்’’ ஆகிய அறிவிப்புகளையும் அமைச்சர் அன்பழகன் தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.
2010-11-ம் நிதியாண்டில் வரிகள் உள்ளிட்ட இனங்களின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாய் ரூ.63,092 கோடியாக இருக்கும். மொத்தச் செலவு ரூ.66,488 கோடியாகும்.
வணிகச் சின்னம் இடப்பட்ட காபித் தூள் (உடனடி காபித்தூள் தவிர), பெயிண்ட் பிரஷ், வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், கத்தி, கத்திரிக்கோல், கையில் பயன்படுத்தும் ஊசிகள், கொக்கிகள்-பட்டன்கள் போன்ற தையல் பொருள்கள், வணிகச் சின்னம் இடப்பட்ட உடனடி உணவுப் பொருள்கள் (மாவு, பொடி மற்றும் ஈர மாவு உள்பட) ஆகிய பொருள்கள் மீது இப்போதுள்ள 12.5 சதவீத வரி, 4 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.176 கோடியாகும். இத்துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு கொள்முதல் விலை உயர்வு, பதநீர் கொள்முதல் உயர்வு, ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தொடர்ந்து குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை ஊக்குவிக்க, வரும் நிதி ஆண்டில்                  ரூ.2,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பயிர்க்கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


தி.மு.க.அரசின் 2010-11 பட்ஜெட் தமிழகத்தை அழிவுப்பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.
செல்வி. ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர்

தமிழக அரசின் பட்ஜெட்டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது.

டாக்டர். ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர்

நிதிநிலை அறிக்கையில் சுமார் 72 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும், மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. சில பொருள்களின் மீது வரிகளை நீக்கியும், குறைத்தும் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒரு மாயாஜாலத்தைப் போல் உள்ளது. உண்மையில் விலைவாசி குறைந்தபாடில்லை.
கேப்டன். விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர்

....................


மீண்டும் பிரபாகரன்!

அக்கினிக் குஞ்சு



‘‘கண்ணுக்கு வெற்றிடமாகத் தோன்றும்... ஆனால் அதைக் காற்று நிச்சயம் நிரப்பும்’’ சீனப் புரட்சியாளன் மாவோவின் புரட்சி மொழிகள் தமிழ் ஈழ மக்களின் நம்பிக்கை மொழியாக இப்போது உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி ஒரே நாளில் ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொத்தாகக் கொன்ற கொடிய சிங்களர்கள்... புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என ஓர் உடலைக் காட்டினார்கள். அதன் பிறகு பிரபாகரனின் குடும்பத்தினர்.... புலிகள் இயக்கத்தின் புலனாய்வுக் கட்டளைத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உட்பட புலிகளின் முக்கியத் தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாகப் பல தகவல்களைப் பரப்பிவந்தது சிங்கள அரசு.
பிரபாகரன் இறந்துவிட்டார் என்றால்... அதற்கான இறப்புச் சான்றிதழைத் தா என இலங்கையிடம் கேட்டது இந்தியா. சில கோடிகள் மக்கள் தொகையே கொண்ட சுண்டைக்காய் தீவு இலங்கை... ஆசியாவின் வல்லரசான இந்தியாவின் கேள்விக்கு  இன்னும் பதில் அளித்துக்கொண்டிருக்கிறது. ‘இன்னும் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைக்கவில்லை’ என உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற சி.பி.ஐ.யின் இயக்குனர் சொல்கிறார்.
ஆனால்... ஓரிரு நாளிலேயே அரக்கப் பறக்க யார் மீதுள்ள விசுவாசத்தைக் காட்டும் விதமாகவோ, இதை மறுத்தார் மத்திய உள்துறை அமைச்சர். ஆனால்... மீண்டும், ‘பிரபாகரன் மரணச் சான்றிதழ் வரவில்லை’ என உண்மையை உடைத்திருக்கிறார் சி.பி.ஐ. இயக்குனர்.
இந்த நிலையிலேதான்... சிங்கள, இந்திய கூட்டுச் சதிகளைத் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே... புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸின் ‘வான்ட்டடு’ அறிவிப்பு.
ஆமாம்... சில தினங்களுக்கு முன் இன்டர் போல் வெளியிட்ட ரெட் அலர்ட் தேடுதல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுக் கட்டளைத் தலைவர் பொட்டுஅம்மானைப் பல குற்றங்ளுக்காகத் தேடுகிறோம் என அறிவித்துள்ளது. இதுமட்டுமல்ல... பொட்டு அம்மானோடு சார்லஸ், நவரத்னம் ஆகியவர்களையும் தேடுவதாக இப்போது அறிவித்திருக்கிறது இன்டர்போல்.
உடனே அவசர அவசரமாக பதைத்துப் போன சிங்கள அரசு... ‘ஐயோ பொட்டு அம்மான் தன் மனைவியோடு வயிற்றில் குண்டு கட்டி வெடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தேடுகிறோம் என அறிவிக்காதீர்கள்’ என கெஞ்சிக்கொண்டிருக்கிறது. ஆனால்... அதை இன்டர்போல் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?
‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தான்’’ என்று பழமொழி சொல்வார்கள். அப்படியென்றால் ராஜபக்ஷேயின் வாயால் முட்டாள் என வர்ணிக்கப்பட்ட பொன்சேகாவின் தலைமையில் இருந்த சிங்கள ராணுவமும் முட்டாள் ராணுவம்தானே? கெட்டிக்க்காரன் புளுகுக்கே ஆயுள் கொஞ்ச நாள்தான் என்னும்போது முட்டாள்களின் புளுகுக்கு எத்தனை நாள்? அதுதான் இப்போது ஒவ்வொன்றாய் உடைந்துவருகிறது.
இன்டர்போலின் தேடுதல் அறிவிப்புப்படி பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்ற உண்மையைவிடப் பல மடங்கு உறுதியாக பிரபாகரன் இருக்கிறார் என்பதையும் இதுவே சொல்லிவிடுகிறது. எனவே இந்த விஷயத்தில் சிங்கள, இந்திய கூட்டுச் சதியை இன்டர்போலின் அறிவிப்பு பொய்யாக்கியிருக்கிறது.
மேலும், இன்டர்போலால் தேடப்படுவோர் பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் சார்லஸ்  என்ற பெயர், பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனிதானா என்ற கேள்வியும் இப்போது கிளம்பியிருக்கிறது. ஏனென்றால் சார்லஸின் அங்க அடையாளமாக குண்டான உடம்பு வாகு கொண்டவர் என குறிப்பிட்டிருக்கிறது இன்டர்போல்.
ஏற்கெனவே இறப்புச் சான்றிதழ் விவகாரத்தில் தடுமாறும் இலங்கை அரசு, இன்டர்போலின் அறிவிப்பின் மூலம் மேலும் தள்ளாடிப் போயிருக்கிறது. அதற்கு நேர்மாறாக தமிழ் இனத்துக்கு புதிய நம்பிக்கைக் காத்திருக்கிறது! என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.  இதற்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கின்றன இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள். சிங்கள ராணுவம் அம்பாறை பகுதியில் பல மாதங்களாக முற்றுகையிட்டு பொட்டு அம்மானைப் பார்த்தீர்களா என்று நேரடியாகவே பல பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழ் இளைஞர்களைக் குறிவைத்து காலை முதல் மாலை வரை நடக்கிறதாம் இந்த விசாரணை.
ஆக... சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படையாக பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என தெரிவித்தாலும்....  தங்களது புலனாய்வுத் துறையினர் மூலம் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொட்டுன் அம்மான் இருக்கிறார் என்றால் பிரபாகரனும் இருக்கிறார் என்பது சிங்கள ராணுவத்துக்கு நன்றாகவே தெரியும்.
கடந்த மாவீரர் தினமான நவம்பர் 27 அன்று பிரபாகரன் வருவார் என உலகம் முழுதும் தமிழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வரவில்லை. அதே நேரம் இப்போது சிங்களர்களோ... போர் முடிந்த ஒரு வருட நிறைவான மே 18 அன்று பிரபாகரன் உலகத் தமிழர்களிடையே வருவார் என கருதுகிறார்கள்.
இந்த விரக்தியில்தான்  கிளிநொச்சி, வன்னிப் பகுதிகளில் உள்ள புலிகளின் மாவீரர் நினைவுச் சின்னங்கள், தமிழ்க் கோயில்கள் உட்பட தமிழர் களின் பிரதேசங்களை முற்றிலும் சிங்களமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிங்களர்கள்.
இதற்கு உதவி செய்வதோடு தமிழர் இருந்த பகுதிகளில் புத்தர் கோயில்களைத் திறந்துவைத்து வருவது யார் தெரியுமா? ஈழத் தமிழர்களாலும், தமிழகத் தமிழர்களாலும், உலகத் தமிழர்களாலும்... துரோகி, கருங்காலி என அழைக்கப்படும் கருணாதான்.
ஆக நவம்பர் 27ஐ தமிழர்கள் மட்டும்  எதிர்பார்க்க... வரப் போகும் மே 18ஐ தமிழர்கள் ஆர்வத்தோடும் சிங்களர்கள் அச்சத்தோடும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.




..............................


பெரியார்தாசன் அப்துல்லா ஆனது ஏன்?

ஒரு மதவாதி இன்னொரு மதவாதி ஆவதில் ஆச்சரியமில்லை. பத்தாயிரம் ரூபாய் பணம், ஐம்பது பேரை மதம் மாற்றினால் ஒரு வீடு இலவசம் என இன்றும் மதமாற்ற ஆஃபர்கள் தமிழ்நாட்டில் நடந்துவருகின்றன. பொருளாதாரத்துக்கு ஆசைப்பட்டும், மூளைச் சலவைகளில் முடங்கிப் போயும் பல சராசரி மனிதர்கள் மதம் மாறி வருகிறார்கள். ஆனால்... தனது பெயரில் கூட தன்னை இதுவரை கடவுள் மறுப்பாளராகவே காட்டி வந்த பெரியார்தாசன் திடீரென அப்துல்லா ஆனதில் பல தரப்புக்கும் சந்தேகம், அதிருப்தி, சலசலப்பு. அதுவும் இங்கே எத்தனையோ மசூதிகளும், உலமாக்களும் இருக்க... சவுதி அரேபியா போய் மதம் மாறியிருக்கிறார் மனிதர். இதுபற்றி அவரே இணையங்களிலும், பத்திரிகைகளிலும் விளக்கமும் அளித்திருக்கிறார்.
‘‘பத்து வருடமாகக் குரானை படித்து வருகிறேன். மற்ற மத வேதங்களில் எல்லாம்... கடவுள் சொல்வதாக யாரோ சொல்வது போல இருக்கிறது. ஆனால்.... குரான் மட்டும்தான் கடவுளே நம்மிடம் பேசுவதாக இருக்கிறது.  நான் தேடிய ஒரே கடவுள் அல்லாதான்னு நம்பி சேர்ந்துவிட்டேன்’’ என குமுதம் இதழில் விளக்கம் கொடுத்திருக்கும் பெரியார்தாசன்... கூடவே, ‘‘முஸ்லீம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க முயற்சி எடுப்பேன். தர்கா வழிபாடு, சந்தனக்கூடு போன்றவற்றை எதிர்ப்பேன்’’ என்றும் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
அப்துல்லா இப்படி மாய்ந்து மாய்ந்து விளக்கம் கொடுத்தாலும்... அவர் மூன்று திசைகளில் இருந்து கடுமையாகக் கண்டிக்கப்படுகிறார். அவர் இதுவரை இருந்ததாகக் கருதப்பட்ட பகுத்தறிவாளர்கள் தரப்பு, இந்து மத அமைப்புகள், அவர் இப்போது சேர்ந்திருக்கும் முஸ்லிம்களிலேயே சிலர் என மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் அப்துல்லா.
இது பற்றி...
பகுத்தறிவுத் தரப்பில்... ‘‘அவரைப் பற்றி எங்களுக்கு முன்னமே தெரியும். பெரியார் கொள்கைப் பிரசாரத்தை கூட்டங்களில் பேசுவதைப் பல வருடங்களாக நிறுத்திவிட்டு... தனியார் தொலைக்காட்சிகள், வெளிநாடுகளில் பகுத்தறிவு, தமிழ் உணர்வு என்ற பெயரில் பணம் பண்ணி வந்தார். பல வருடங்களாகக் குரானை ஆழ்ந்து படிக்கிறேன் என்று சொன்னவர்.... இத்தனை வருடங்களாகத் தனது பெரியார்தாசன் என்ற பெயரை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை? இன்னும் சொல்லப்போனால் பெரியார்தாசன் என்ற பெயரே தவறு. தாசன் என்ற அடிமை முறையை ஒழிப்பதே பெரியாரின் லட்சியம். இவரோ பெரியாருக்குத் தாசன் என்று பெயர் வைத்துக்கொண்டார். அதனால்தான் பகுத்தறிவு இயக்கத்திலிருந்து வெகுகாலம் முன்னதாகவே அவர் ஓரங்கட்டப்பட்டார். இப்போது அவர் இஸ்லாமியர் ஆகியிருப்பதன் காரணங்களாகச் சொல்வது எல்லாமே நகைப்புக்கு உரியவைதான். பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமத்துவம் எல்லாவற்றுக்கும் அடிப்படையே கடவுள் மறுப்புதான்.  ஆனால், கடவுள் மறுப்பு தவிர மற்ற பெரியாரிய கொள்கைகளில் இப்போ தும் உடன்படுவதாகச் சொல்கிறார். இது எல்லா ரையும் ஏமாற்றும் செயல். பகுத்தறிவுவாதிகள், புத்த மதத்தினர் ஆகியோரை ஏமாற்றிவிட்டு இப்போது இஸ்லாமியரை ஏமாற்ற முடிவுசெய்திருக்கிறார் போலும்’’ என கொட்டித்தீர்த்தனர். பகுத்தறிவு வட்டாரத்தில்  இப்படி என்றால்... அப்துல்லாவாக சேர்ந்த இஸ்லாமியர்களிடத்திலும் எரிச்சலைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்.
நம்மிடம் பேசிய இஸ்லாம் மதத்தினர் சிலர்... ‘‘பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை இதயந்தழுவி வரவேற்கிறோம். ஆனால்..., அவர் தர்கா வழிபாட்டையும், முஸ்லிம்களின் சில வழக்கங்களையும் புண் படுத்திப் பேசியிருக்கிறார். அவர் புது முஸ்லிம். நாங்கள் நெடுங்கால முஸ்லிம். எது சரி எது தவறு என இப்போதே பெரியார்தாசன் சொல்ல வேண்டிய அவசரம் இல்லை. அவருடன் இது பற்றி நாங்கள் விவாதிக்கத் தயார். ஆனால்... விவாதம் முடிவதற்குள் வேறு ஏதாவது மதத்துக்கு அவர் மாறிவிடாமல் இருக்க வேண்டும்’’ என்கின்றனர்.
இந்து மக்கள் கட்சி தரப்பில்... ‘‘இந்து மதத்தின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் யாராரோ சொல்லியதாம். ஆனால் குரான் மட்டும் கடவுள் சொன்னதாம். அதனால் நம்புகிறாராம். அப்படி என்றால்.... கடந்த 45 வருடங்களாக மூதாதையர்கள் எழுதிய அறிவுச் செல்வங்களான வேதங்களை ஏன் இவர் எதிர்த்தார்? 45 வருடங்களாக கடவுளே இல்லை என்றவர்.... மனிதர்கள் படைத்த வேதங்களை முழுதும் கற்றுவிட்டுத்தான் எதிர்க்கிறாரா? குரான் படித்து முடிப்பதை விட வேதம் படித்து முடிக்க அதிக நாள் ஆகும். எனவே இரு மத வேதத்தையும் ஒப்பிட்டு இந்தியாவின் பெரும்பான்மை மக்களை புண்படுத்தி இருக்கிறார். அவர் இதுவரை தழுவாத மதமில்லை. அதனால் எதையாவது தழுவட்டும். ஏன் மற்ற மதத்தினரை புண்படுத்த வேண்டும்? இனி இஸ்லாமிய பிரசாரத்துக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் அங்கே போயிருக்கிறார். அந்த வேலையை மட்டும் செய்யட்டும்’’ என்கிறார் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கண்ணன். இனி மேடைகளில்தான் அப்துல்லா இவற்றுக் கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டும்!


.......................


33% இட ஒதுக்கீடு... கனவா? தூக்கமா?


மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் பதினான்கு ஆண்டு காலம் வேண்டுமென்றே   தூங்கிவிட்டு.... ராஜ்யசபாவில் பல உறுப்பினர்கள் வெளிநடப்புக்குப் பின் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால்... இதை மறைப்பதற்காக...  ‘பதினான்கு ஆண்டு கால கனவு நிறைவேறிவிட்டதாக’ சோனியாவுக்கு புகழாரங்கள், பாராட்டுகள்.
ராஜ்யசபாவில்  நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மூன்றில் ஒரு பங்குடன் நிறைவேறினால்தான் அது நடைமுறைக்கு வரும். ஆனால்.. காங்கிரசின் நடவடிக்கைகளைப் பார்த்தால் பெண்களுக்கு அது தலையணைக் கனவாக போய்விடுமோ என்ற நிலைதான்.
 ராஜ்யசபாவில் கடும் அமளிக்குப் பின்னர் 186க்கு 1 என்ற விகிதத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றிவிட்டனர்.ஆனால்... மக்களவையில் பி.ஜே.பி, லாலு பிரசாத், முலாயம் சிங், புதிய தலைவலியான மம்தா ஆகியோரின் எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்ற முடியாது என காங்கிரஸுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான்... ‘ஒத்த கருத்து உருவான பின்னர் மக்களவையில் தாக்கல் செய்வோம்’ என அறிவித்திருக்கிறது. ஆனால் அத்தைக்கு மீசை முளைத்தால்தான் மகளிர் மசோதாவில் ஒத்த கருத்து வர வாய்ப்புண்டு என்பதுதான் டெல்லி நிலவரம்.
ஏன் என்கிறீர்களா?
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கொடுப்பதை உள்ளபடியே காங்கிரஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் விரும்பவில்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் இப்போது மொத்தமுள்ள 543 மக்களவை எம்.பி.க்களில் 181 பேர் பெண்களாக இருக்க வேண்டும். ஆக, 181 தொகுதிகளில் அனைத்துக் கட்சிகளும் பெண்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இதில் எந்தக் கட்சிக்கும் உடன்பாடில்லை. காரணம்... இத்தனை இடங்களை பெண்களுக்குக் கொடுக்க இப்போது அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு மனதில்லை. நடைமுறையிலும் இத்தனை பெண் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு எந்தக் கட்சியும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே பஞ்சாயத்து தேர்தல் போல கணவர்களே பின்னால் இருந்து ஆளும் நிலைதான் உருவாகும். இதை ஆண்கள் விரும்பவில்லை. எனவேதான் வெளியில் ஆதரவளிப்பது போல் வேஷம் போட்டாலும் காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய கட்சிகள் இதை சொத்தையாக ராஜ்யசபாவில் நிறைவேற்றி தங்கள் பெண்ணிய முகத்துக்கு பவுடர் போட்டுக் கொண்டுள்ளன.
பிரதான பெரிய கட்சிகள்  இப்படி  என்றால்  லாலு, முலாயம் ஆகியோர் உள் ஒதுக்கீடு பற்றி சர்ச்சையைக் கிளப்பி அதன் மூலம் மசோதாவை தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர். அதாவது 33% இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என சாதி, மத ரீதியாக உள் ஒதுக்கீடு செய்த பிறகே மசோதாவை நிறைவேற்றவேண்டும். இப்போது இருப்பது போல பொதுவான 33% இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அவர்கள் நிலைப்பாடு. மசோதாவை தடுத்து நிறுத்த இதுவும் ஒரு சாக்குதான் என்பது முலாயமின் சமீபத்திய பேச்சு மூலம் வெளிப்படுகிறது.
அதாவது, ‘பெண்களுக்கு 33  சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால், நாடாளு மன்றத்தில் விவாதம் நடக்காது. விசில் சத்தம்தான் கேட்கும். பெண் உறுப்பினர்களைப் பார்த்து ஆண் உறுப்பினர்கள் எல்லாம் விசில் அடித்துக் கொண்டிருப்பார்கள்’’ என தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் முலாயம் சிங். நேற்றுவரை முலாயமின் நண்பராக இருந்து இன்று எதிரியாக மாறியிருக்கும் அமர்சிங், ‘‘இதற்காகவே முலாயம் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
சி.பி.எம்.மின் பிருந்தாகாரத் உட்பட பலரும் முலாயமின் ஆணாதிக்கப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர்     கருணாநிதியோ,. ‘33% ஒதுக்கீடு பழம் என்றால், அதில் உள் ஒதுக்கீடு என்பது சுளை... பழத்தை வாங்கினால்தான் அதில் சுளை பற்றி பேசமுடியும்’’ என வார்த்தை விளையாட்டு மூலம் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
உள் ஒதுக்கீடு இல்லாமல் மசோதாவை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என இந்த வகையறாகக்ள் கூற... பெண்கள் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் கடுமையாக எதிர்ப்போம் என கிளம்பிவிட்டது பி.ஜே.பி. எனவே, நாடாளுமன்ற மக்களவையில் 33% இடஒதுக்கீடு மகளிருக்கு கிடைக்க பொதுக்கருத்து உருவாகாது என்பதே இப்போதைய சூழ்நிலை.
நாடாளுமன்றத்தில் 33% பெண்கள் இட ஒதுக்கீட்டுக்காக வாய் கிழியப் பேசும் அரசியல் கட்சிகள்.. தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும்போது 33% இட ஒதுக்கீடு கொடுத்தாலே நிறைய திறமையான பெண்கள் அரசியலுக்கு கிடைப்பார்கள். அதை விட்டுவிட்டு... அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகள் தங்கள் வேட்பாளர்களில் முதலில் 33% பெண்களை நிறுத்தவேண்டும். அதை விட்டுவிட்டு மொத்த தொகுதிகளில் இத்தனை சதவிகிதம் பெண்களுக்கு என்று சொல்வதால் உண்மையான பெண்  பிரதிநிதித்துவம் கிடைப்பது அரிதுதான்.
இமயத்தில் உறையும் சிவன் கூட தன்னில் ஐம்பது சதவிகிதத்தை தன் மனைவி யான உமையாளுக்குக் கொடுத்தான். ஆனால்.. நம் அரசியல் கட்சிகளோ தங்களது வேட்பாளர் பட்டியலில் 33% ஒதுக்க யோசிக்கின்றன. இப்போதுதான் தெரிகிறது அரசியல் கட்சிகளின் பெண்ணுரிமை. இது பதினான்கு ஆண்டுகால கனவு அல்ல. நமது பதினான்கு ஆண்டுகால அலட்சியத் தூக்கம்.


................


ஐ.பி.எல்.லில் அவிழ்க்கப்படும் ஆடைகள்

2009ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட இருந்த ஐ.பி.எல். 20 20 கிரிக்கெட் போட்டிகள், லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதால், தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் 12-_ந் தேதி தொடங்கி, இந்தியாவில் 45 நாட்கள் நடக்கின்றன.   அவற்றில் 7 போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.
இந்தப் போட்டிகள் நடக்கும் அதே காலகட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கோடிக்கணக்கான மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகள் அவை. இந்த நேரத்தில் இதுபோன்ற போட்டிகளை நடத்தினால் மாணவ மாணவிகளின் கவனம் படிப்பில் இருந்து சிதறும். அதனால் பெற வேண்டிய மதிப்பெண் குறையும்.
இந்தப் போட்டிகளை தேர்வு முடிந்த பிறகு வேறொரு தேதிக்குத் தள்ளி வைக்க உத்தர விட வேண்டும். கிரிக்கெட் போட்டிகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகளைப்  பிறப்பிக்க   வேண்டும்.
ஹென்றி
திரைப்பட தயாரிப்பாளர்


ஐ.பி.எல் களியாட்டம், சூதாட்டம், போதை போன்ற மிகப்பெரிய அநீதியை சாதாரணமான விஷயமாக்கி, இதன் மீது ஆர்வத்தைத் தூண்டி, புதிய தலைமுறைக்கு ஒரு பேஷனாக்கி போதிக்கிறது.
ஐ.பி.எல்-லில் விளையாடும் வீரர்கள் ஏலம் விடப்பட்டு, அவர்களை வாங்க மிகப்பெரிய நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றது. முதலாளிகள் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பரபரப்பை ஏற்படுத்தி, மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து அதன் மதிப்பைக் கூட்ட சினிமாத்துறையை இதில் ஈடுபடுத்தி, மக்களை ஏமாற்றி லாபம் சம்பாதிக்கிறது. அதுமட்டுமின்றி, ஏகப்பட்ட ஸ்பான்சர்களைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அதோடு சிக்ஸுக்கு ஒரு ஸ்பான்சர், கேட்சுக்கு ஒரு ஸ்பான்ஸர், மொமெண்ட் ஆஃப் சக்ஸஸுக்கு ஒரு ஸ்பான்ஸர் வேறு.
இந்த வருடம் ஐ.பி.எல். அமைப்புக்கு அதிரடியாக 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  ஐ.பி.எல். நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
 ஐ.பி.எல்.இன் தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அணிகளின் இவ் வருட நிறுவன மதிப்பீடு :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பட்டியலில் ரூ.220 கோடி ரூபாயுடன் முதலிடம் பெற்றுள்ளது.
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.210 கோடி - இரண்டாவது இடம்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ரூ.205 கோடி - மூன்றாவது இடம்.
அடுத்த இடங்களில் தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் ரூ.190 கோடி - 4ஆவது இடம்.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் ரூ.185 கோடி - 5ஆவது இடம்.
டில்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.184 கோடி - 6 ஆவது இடம்.
நடிகை பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.164 கோடி - 7ஆவது இடம், டெக்கான் சார்ஜர்ஸ் ரூ.156 கோடி - 8 ஆவது இடம்.
இவற்றை விடவும் சமீபத்திய ஏலத்தில் கொச்சி ரூ.1,533 கோடி, புனே ரூ.1,702 கோடி ஆகிய இரண்டு புதிய அணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸோனி ஒளிபரப்புக்கு 10 வருடத்துக்குக் கொடுத்த தொகை  10.4 பில்லியன் டாலர், டி.எல்.எஃப் டைட்டிலுக்குக் கொடுத்த தொகை 5 வருடத்துக்கு 200 கோடி இப்படி எத்தனையோ ஸ்பான்சர்கள். இதை சூதாட்டம் என்றே சொல்லலாம். அணி மற்றும் வீரர்களின் மதிப்பை கூட்டி லாபம் சம்பாதிக்க சில ரகசிய உடன்பாடுகள், ரகசிய தில்லுமுல்லு நடக்காமலிருக்குமா என்ன? வழிமுறைகளையும் அதை அரங்கேற்ற நடக்கும் போட்டிகளுக்குள் வன்முறையும் கொலைகளும்கூட நடக்க வாய்ப்பிருக்கிறது.
அது மட்டுமின்றி, நாடு வாரியாக நடத்தப்படும் பொதுப்போட்டிகள் மாதிரி இல்லாமல் இந்த ஐ.பி.எல்.லில் மாநில வாரியாக அந்தப் போட்டிகளில் சூதாட்டப் போட்டிகளால் இந்த மாஸ் கிரிக்கெட் மாநிலங்களிடையே நிலவி வரும் பகைமை உணர்வு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அணிகளின் மொத்த விலை 1500 கோடிக்கு மேல் இருக்கும் என்கின்றனர். ஏகப்பட்ட ஸ்பான்சர்கள், பரபரப்புகள், நகரங்களில் கூட்டம் குறைந்து விட்டது. அரங்கத்திலும் டி.வி. முன்பும் அமர்ந்துவிட்டனர் பற்பலர். எந்த வேலையையும் தள்ளி வைக்கும், நிராகரிக்கும் உரிமை இந்தச் சமயத்தில் மட்டும்தான் உண்டு.  இந்த கிரிக்கெட்டுக்கு அந்த மவுசு உண்டு.
விளையாட்டை விற்பனை செய்து, லாபம் பார்த்து மோசமான கலாச்சார ரசனையைப் புகுத்தி நடத்தப்படும் சூதாட்டத்தைப் பார்த்து பல மாநில மத்திய ஆட்சியாளர்கள், சமூக காவலர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். எதிர்வினைக் கூட நிகழவில்லை ஏன்?
டி.வி. பார்க்கும் ரசிகர்களே பெட் கட்டிக் கொள்கிறார்கள். வெற்றி பெற்றவர் தோல்வி அடைந்தவரைப் பார்த்து கொக்கரிக்கிறார். இவருக்கே முகம் சிவக்கிறது. கூட இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். அங்கே பகைமை கூடுகிறது. அந்த இடத்திலேயே மோதிக்கொள்ள முற்படுகின்றனர். ஆக, வினையே விளையாட்டாகிறது.



ஐ.பி.எல். அமைப்பில் பணத்தை முதலீடு செய்தவர்கள் லாபத்தை மட்டுமே நோக்காகக் கொண்டுள்ளனர். இதனால் ஏனைய விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் சுத்தமாக தொலைந்து விட்டது. தடகளத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
‘தங்க மங்கை’ பி.டி.உஷா

ஐ.பி.எல். என்பது விளையாட்டல்ல, வெறும் வியாபாரம். இதனால் கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வாலிபால் மைதானங்களில் கூட கிரிக்கெட் விளையாடுவதை காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
வில்சன் செரியன்
முன்னாள் நீச்சல் சாம்பியன்

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களின் ஒதுக்கீடுகள் மூலம் ஏர் இந்தியா உள்பட நாட்டின் முக்கிய நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்து விடுகின்றனர். இதனை மாற்றி மற்ற விளையாட்டு வீரர்களை அந்த பணியிடங்களுக்கு நிரப்ப வேண்டும். கிரிக்கெட் தவிர ஏனைய சர்வதேச விளையாட்டுக்களையும் ஊக்குவிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
ஒருவர் கஷ்டப்பட்டு வறுமையையும் தாண்டி பல்லாண்டுகள் கழித்து சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற பின்பு விருதுகள் வழங்கும் வழக்கத்தை விட்டுவிட்டு ஆரம்பக் காலத்திலேயே அவர்களுக்கு அரசு பல வழிகளிலும் உதவ வேண்டும். இது போன்ற ஸ்பான்சர்களை ஏற்படுத்தித்தர முனைய வேண்டும்.
வீரர்களை வெளிப்படையாகப் பணம் கொடுத்து   வாங்குவதும், விற்பதும்   நல்ல தல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும், ஐ.பி.எல். போட்டிகள் வியாபாரத்துக்காக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வணிகமயமாவதை தடுக்க ஐ.பி.எல். போட்டிகளைத் தடை செய்யவேண்டும்.
நிதீஷ்குமார்
பீகார் முதல்வர்



................................



‘கனவு தேசம்’ 
நூல் வெளியீட்டு விழா

அமெரிக்கா_உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தால், ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கும் விழாவும், கவிஞர் க.கௌ. முத்தழகன் எழுதிய, ‘கனவு தேசம்’ நூல் வெளியீட்டு விழாவும், 7_3_2010 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாண்டிச்சேரியில் உள்ள அண்ணாமலை ஹோட்டலில் சிறப்புடன் நடைபெற்றது.
தொழிலதிபர், கிரானைட் சக்ரவர்த்தி திரு.மிகு. றி.ரி. பவுல்ராஜ் தலைமையில், அமெரிக்கா உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் / வேந்தர். டாக்டர்.
ஷி. செல்வின் குமார் வி.கி.றிலீ.ஞி அவர்கள் கனவுதேசம் நூலை வெளியிட, இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம் (டிரஸ்ட்) _ மாநிலத் தலைவர் ஞிக்ஷீ.றி. மணிவேல் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம் (டிரஸ்ட்), தலைமை நிலையச் செயலாளரும், உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.வி.பொன்முடி அரசு அவர்கள் வாழ்த்திடவும், கவிஞர். க.கௌ. முத்தழகனின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.



.....................


பொதுத் தேர்வுகளும் அவற்றின் நம்பகத் தன்மையும்

செல்லூர் கண்ணன்


பொதுவாகப் பள்ளிகளின் கல்வித்தர அலகாகப் பொதுத்தேர்வு முடிவுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதனால் அரசுப் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் அதிக விழுக்காட்டுத் தேர்ச்சி எனும் இலக்கை நோக்கிப் பயணிக்கின்றன. மாறாகத் தனியார் பள்ளிகள் நூறு விழுக்காட்டுத் தேர்ச்சி மற்றும் உயர் மதிப்பெண் சாதனை ஆகிய இரு நோக்கங்களுக்காகவும் உழைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பயில்வோரில் படிப்பறிவில் குறைந்த ஏழைப் பெற்றோர்களுடைய  குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவை தனியார் பள்ளிகளின் சாதனைகளுடன் போட்டியிட இயலாதவையாக உள்ளன.
அரசுப் பள்ளிகளில், வகுப்பின் முதல் மாணவனுக்கும் கடைநிலை மாணவனுக்குமிடையே கற்றல் திறனில் பெருத்த வேறுபாட்டைக் காண முடியும். அதனால் அதிக விழுக்காட்டுத் தேர்ச்சி காட்டவே ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இதைக் கல்வித்துறை நன்கு உணர்ந்தே கடந்த ஆண்டினும் மேன்மையான வெற்றிக்காகப் பாடுபடப் பள்ளித் தலைமையாசிரியர்களையும் ஆசிரியர்களையும் அறிவுறுத்துகின்றது. வறுமையில் உழலும் பெற்றோர்கள், இலவசக் கல்வி தரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் தம் குழந்தைகளின் கல்விமுன்னேற்றம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முன்னேற்ற அட்டைகளில் பெரும்பாலும் தாயே ஒப்பமிடல், கைரேகையிடல் வழக்கம். குறைவான மதிப்பெண் பெறும் குழந்தைகள் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கையொப்பம் பெறுவதையே விரும்புகிறார்கள். தந்தையின் கடுமையான போக்கை எதிர்கொள்ள அஞ்சுபவர்கள் முன்னேற்ற அறிக்கையைத் தந்தையின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்வதும் உண்டு.
கல்வி அக்கறை கொண்ட கடுமையான பெற்றோர் களாயின் அவர்கள் தம் குழந்தைகளைக் கண்டித்தும், தண்டித்தும்; படிப்பின் முக்கியத்துவத்தை அறிய வைக்க முயல்கின்றனர். இவ்விருவகைக் குடும்பச் சூழலில் எதுவாயினும் அது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதில்லை. மாறாகக் குறைகளை மறைக்கும் வழக்கத்திற்குக் குழந்தைகளைத் தூண்டுகின்றன அல்லது அவர்களைக் கல்விச் சூழலின்மீது வெறுப்பு கொள்ளச் செய்கின்றன. அதனால் குழந்தைகளுக்கு ஊக்கம் தரக்கூடிய செயல்களை மட்டுமே பெற்றோர்களும் ஆசிரியர்களும் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த வேண்டும். வற்புறுத்தித் திணிக்கப்படுபவை எப்போதும் எதிர்விளைவைத் தருபவைதாம்.
அண்மைக் காலமாகப் பள்ளிக் கல்வியின் நோக்கு பல்லாற்றானும் பரவலாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அது மேலோட்டமான, தேர்ச்சி அடிப்படையிலான கல்வியாக உள்ளதேயன்றி வாழ்க்கைக்குப் பயன்படத்தக்க ஆழ்ந்த கல்வியாக அமையவில்லை. குழந்தைகளை மதிப்பெண் நோக்கில் அணுகுதல் சரியான முறையல்ல.
குறைந்தபட்சக் கற்றல் அடைவுகள் எனும் கருத்தைப் பேராசிரியர் தவே தலைமையிலான கல்விக்குழு பரிந்துரை செய்ததற்கு முன்னிருந்த கல்விச்சூழலுக்கும், இன்றுள்ள நிலைக்குமிடையே பெருத்த வேறுபாடுகள் காணப்படுவதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். பொதுத்தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியைக் காட்டுவதற்காகப் பள்ளிகள் தற்காலத்தில் அளப்பரிய முயற்சியை மேற்கொள்கின்றன. இது பாராட்டுக்குரியதுதான் என்றாலும், இதிலுள்ள மதிப்பெண் நோக்கு முதிர்ச்சிபெற்ற ஆழ்ந்த கல்வியின் வரையறைக்குள் வரவில்லை என்பதை மறுக்க இயலாது.
மாணவனை அதிக மதிப்பெண் எடுக்க இயல்பவனாக மாற்றத் துடிக்கும் ஆசிரியர், அவனுடைய ஆளுமை வளர்ச்சிக்குத் தடைநிற்கிறார் எனலாம். தன்னாற்றலுள்ள ஒழுக்கமேம்பாடுடைய மனிதனாக மாணவனை உருவாக்கும் கல்வியே சிறந்தது. மாணவனின் தேர்ச்சிக்கு மட்டுமே உழைக்கும் ஆசிரியர் ஒருக்காலும் சிறந்த ஆசிரிய ராகப் பரிமளிக்க வாய்ப்பில்லை. ஆசிரியரின் தேர்ச்சி விழுக்காட்டு நோக்கானது கற்றல் குறைபாடுள்ள மாணவனின் இடை நிற்றலுக்கு வழி வகுக்கும் அபாயத்தை உள்ளடக்கியதாகும் என்பதையும் மறந்து விடலாகாது. மேலும் தேர்வு நோக்கில் மாணவனின் மனத் தில் திணிக்கப்படும் கருத்துகள் தேர்வு முடிந்தபின் விரைவில் முழுவதுமாக மறந்து போய்விடக்கூடியவை. மாணவனுக்கு இதில் நிலைத்த பயன் எதுவுமில்லை. இருந்தும் பெரும்பாலான பள்ளிகள் தேர்வுநோக்குக் கல்விமுறையையே பின்பற்றுகின்றன.
தேர்வுகளின் நோக்கத்தை நம்மில் பலரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். அற்றைக் காலத்துக் குருகுலவாசங்களும் திண்ணைப் பள்ளிகளும் மாணவனின் நினைவாற்றல் பயிற்சிக்கு முதன்மை யிடம் தந்தன. அக்காலத்தில் எழுத்துத் தேர்வுகள் இன்றியமையாதனவாகக் கருதப்படவில்லை. மேனாட்டுக் கல்வி முறை அமலாக்கத்தின் பின்னரே எழுத்துத் தேர்வுகள் பரவலாயின. அப்போதும்கூட ஆசிரியர் கற்பித்த கல்வி, மாணவனுக்கு எந்த அளவு போய்ச் சேர்ந்தது என்பதைக் கணக்கிட ஆசிரியர்க்கு உதவும் ஓர் அளவுகோலாகவே எழுத்துத் தேர்வுகள் அறிமுகமாயின.
குறிப்பிட்ட வினாவிற்குப் பெரும்பாலான மாணவர்கள் தவறான விடை எழுதியிருந்தால், அப்பகுதி ஆசிரியரால் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதாகக் கொண்டு அப்பாடப்பகுதியை மீண்டும் கற்பிக்கச் சுட்டும் ஏதுவாக அது கருதப்பட்டது. விடைகள் வரிக்குவரி சரிபார்க்கப்பட்டுத் தரப்படும்; மதிப்பெண் ஆசிரியரின் திறமையை மதிப்பிடுவதற்கான அலகாகக் கருதப்பட்டதே அன்றி மாணவனின் தகுதியாகக் கருதப்படவில்லை. ஆனால் இன்றுள்ள நிலை தொடக்கக் கால எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் முரணாக உள்ளது. அன்று ஆசிரியரின் கற்பித்தல் திறனுக்கான மதிப்பீட்டு அலகாக இருந்த தேர்வுகள், இன்று மாணவனின் கற்றல்திறனை நிர்ணயிக்கும் அலகாக மாறியிருக்கிறது.
தற்காலத்தில், மாணவன் பெறும் மதிப்பெண்களை வைத்தே அவனது தேர்ச்சி நிலையும் எதிர்காலமும் அமைகிறது. மிக அதிக மதிப்பெண் பெறுபவர் கள் திறமைசாலிகள் எனக் கருதப்பெறுகிறார்கள். ஆனால் தேர்வில் மதிப் பெண் பெறுவதற்கும், அம்மாணவன் தன் திறமையைப் பறைசாற்றி வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே உண்மை நிலை. மாணவனின் மதிப்பெண் என்பது அவனுடைய விடைத்தாளில் எழுதப் பட்டுள்ளவற்றிற்கு ஆசிரி யர் தன் மனப்போக்கில் வழங்குகின்ற ஓர் அடை யாள  எண்ணேயன்றி மாணவனின் செயல்திறன் மதிப்பீட்டுக்கு அது வகைசெய்வதில்லை.
அதனால்தான் பத்தாம் வகுப்பில் மாநிலத் திலேயே முதல் மதிப்பெண் பெறுபவர்களால் அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பின் நடைபெறும் +2 பொதுத் தேர்வில் தன் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் போய்விடுகிறது. இவ்விரு காலங் களிலும் மாணவனின் திறமைகள் சமமானவையாக இருந்தாலும்கூட சம விழுக்காட்டுத் தேர்ச்சி என்பது அரிதாக நடைபெறுகின்ற ஒன்றாகவே உள்ளது. ஆக, நம் ஆசிரியர்கள் வழங்கும் மதிப்பெண்களைத் துல்லியமானவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இத்துல்லியமின்மைக்கு ஆசிரியர் மட்டுமே காரணமாகார். தேர்வுமையச் சூழல், விடைத்தாள் திருத்தும் மையங்களில் பொதுவாகப் பின்பற்றப்படும் நெறிமுறைகள் உள்ளிட்டவையும் காரணங்களாக அமைய வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, அனைத்துப் பள்ளிகளும் பொதுத்தேர்வு நடைபெறும் மையங் களாக அமைய வாய்ப்பில்லை. தேர்வு மையமாக அமையாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதுச்சூழலில் ஒருவித அச்சத்துடன் தேர்வுகளை எழுத நேரும்போது, தேர்வுமையப் பள்ளியின் மாணவர்கள் பழகிய சூழலில் தாம் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வை எதிர்கொள்ளும் வசதியைப் பெறுகிறார்கள். இது இயல்பாக தேர்வு மையப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அமைந்த வசதி என்ற கருத்தாக்கத்தைத் தரக்கூடியது.
மேலும், இவ்வகைத் தேர்வு அச்சத்துக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே என்பதும் கவனிக்கத்தக்கது. ஆகையால் தேர்வுமையம் எதிலும் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுத முடியாத நிலைமையை ஏற்படுத்தப் பள்ளிக்கல்வித்துறை முனைய வேண்டும். அப்போதுதான் அனைத்து மாணவர்களின் தேர்வுச்சூழலும் ஏறத்தாழ சமஅளவினதாக இருக்கும்.
தேர்வு எழுதும் மாணவர்களைக் காட்டி லும் அவர்களின் பெற்றோர்களிடமும் ஆசிரியர் களிடமுமே தேர்வுப் பதற்றம் அதிகமாகக் காணப் படுகின்றது. இம்மாணவர்களில் பெரும்பாலானோர் தேர்வுக் காலங்களில் தேவையான அளவு  தூக்கம்கூடக் கிடைக்காமல் அல்லலுறுகின்றனர். மற்ற சில மாணவர்கள் இவர்கள் அளிக்கிற அறிவுரைகளைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போனவர்களாகத் தம்போக்கில் தேர்வைச் சந்திக்கிறார்கள்.
மேலும், கடந்த ஆட்சியில் காட்டப்பட்ட தேர்ச்சியைக் காட்டிலும் கூடுதலான தேர்ச்சியைக் காட்ட அனைத்து வழிகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சகத்தால் கல்வி இயக்ககம் சில நேரங் களில் வலியுறுத்தப்படுவதுண்டு. அதனால் பாடப்பகுதிகளைக் குறைத்து அறிவித்தல், வினாத்தாளைச் சுலபமானதாகத் தயாரித்தல், தேர்வு நடைமுறைகளின் கடுமையைக் குறைத்தல், பொருத்தமற்ற வினாவை வினாத்தாளில் புகுத்திப் பின் அவற்றுக்கும் மதிப்பெண் வழங்குதல், விடைத்தாள் திருத்தும் பணியை வெற்றுச் சடங்காக்குதல், ஓரிரு பாடங்களில் தோல்வி பெற்றவர்களுக்கு உடனடித்தேர்வு நடத்துதல் போன்ற அவலங்களும் அரங்கேற்றமாகின்றன. மாணவன் தன் தகுதியென எதிர்நோக்கும் மதிப்பெண்ணைவிடவும் கூடுதல் மதிப்பெண்ணைத் தர நம் கல்வி அமைப்பு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் நம் குழந்தைகள் பெறும் மதிப்பெண் குறித்து பெருமைப்படவோ அல்லது சிறுமையுறவோ செய்தால் அது நம் அறியாமையே ஆகும்.


..................


சுயமரியாதை இயக்கப் போராளியும் முதுபெரும் எழுத்தாள ருமான குருவிக்கரம்பை வேலு 03.03.2010 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பது.
இளமைக் காலத்தி லிருந்தே சுயமரியாதை இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் களம் கண்டவர். தியாகங்கள் பல புரிந்து சுயமரியாதை இயக்கத்தையும் திராவிடர் கழகத்தையும் வளர்த்தவர்களில் வேலுவும் ஒருவர். குத்தூசியாரின் முழு வரலாற்றையும் படைத்து சாகா வரம் பெற்றவர்.
குருவிக்கரம்பையில் 26.11.1930-_இல் பிறந்த சு.வேலுவுக்கு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. டேவிட் மூலம் பள்ளிக் கல்வியோடு சமூக உணர்வும், திராவிடர் கழகத்தின் மீது ஈர்ப்பும், பெரியாரின் மீது மதிப்பும் ஏற்பட்டது. மேலும் குத்தூசி குருசாமியின் எழுத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
20.8.1953_இல் இராமாமிர்தம் அம்மை யாரைக் கரம் பிடித்தார். பேராவூரணியில் 1963_இல் தந்தை பெரியாரைத் தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்து, தம் மனைவியின் தாலியை அவரின் விருப்பத்தோடு கழற்றித் தரச் செய்து, பகுத்தறிவு இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1963_ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டபோது வேலு அவர்கள் குத்தூசியாருடன் இணைந்தே பணியாற்றினார். 11.10.65 அன்று குத்தூசி குருசாமி அவர்கள் மறைந்த பின்னர் 1970_இல்  குத்தூசியாரின் படைப்புகள், அவரைப் பற்றிய ஆதாரங்கள் ஆகியவற்றைத் திரட்டி குத்தூசியாரின் மகள் ரஷ்யா, பாவைச் சந்திரன் போன்றவர்களின் ஒத்துழைப்போடு 1975_இல் குத்தூசி குருசாமி வரலாற்றைப் படைத்தார். இதுவரை தமிழில் 22 நூல்களைப் படைத்துள்ளார்.
இறுதி வரை தான் கொண்ட நாத்திகக் கோட்பாட்டிலும், பகுத்தறிவுப் பாதையிலும் தடம் மாறாதவராக இருந்து தன்னுடைய உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்விற்கு பயன்பட வேண்டும் என்று விரும்பினார் என்றால் அன்னாரின் சிந்தனை போற்றுதலுக்குரியது. அம்மாமனிதருக்கு வீர வணக்கம்!           


..................


காலவரையின்றி மூடப்பட்டுள்ள சென்னை கவின் கலைக் கல்லூரி


சசிகுமார் என்பவர் முதலாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர். தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சசிகுமார் சிற்பங்களாக ஆக்கிக் காட்சிப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இனவெறியர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை நினைவிற்கொண்டு, தீயாற் சுட இயலாதவாறு தமிழ் இலக்கியங்களைச் சுடுமண் சிற்பங்களாக ஆக்குதல் என்பதான ஒரு கருத்தமைவுடன் இந்தப் பணியைத் துவங்கியதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
இப்படியான ஒரு திட்டத்திற்கு எவ்வித முன் அனுமதியும் அவர் கல்லூரி நிர்வாகத்திடமோ இல்லை செம்மொழி மாநாட்டுக் குழுவிடமோ பெறவில்லை என்கிறார் கலை பண்பாட்டுத் துணை ஆணையர் மணி. ஆனாலும் பொறுப்பு முதல்வர் மனோகர் நடராஜிடம் தான் வாய்மொழி அனுமதி பெற்றதாக சசிகுமார் கூறுகிறார்.
ஏற்கனவே இருந்த முதல்வர் ஓய்வு பெற்றதை ஒட்டி இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மனோகர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைக் காட்டிலும் பணி மூப்புடையவர்கள் இருந்த போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர் முதல்வராக்கப்பட்டுள்ளதாகப் போராடுகிற மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004ஆம் ஆண்டில் இவர் ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து  சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
இவர் பணி ஏற்றவுடன் குமார், நடராசன், சுரேந்திரன், சிங்காரம் ஆகிய நான்கு பகுதி நேர ஆசிரியர்களும் நிதி பற்றாக்குறையைக் காட்டி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இந்த நான்கு ஆசிரியர்களும் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆசிரியரல்லாத பணியாளர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் குடந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். எனினும் தற்காலிக பொறுப்பு முதல்வர் ஜெயபாலிடம் இது பற்றிக் கேட்டபோது அத்தகைய உள்நோக்கம் ஏதுமில்லை. நிதிப் பற்றாக்குறைதான் பணி நீக்கத்திற்குக் காரணம். சுரேந்திரன் எம்.எஃப்.ஏ. சேர்ந்ததால் தொடர்ந்து அவர் பகுதி நேர ஆசிரியராக இருக்க இயலாது. ஊழியர்களை இடமாற்றம் செய்ய நேர்ந்தது நிர்வாகக் காரணங்களுக்காகத்தான், பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை ரத்து செய்தோம் என்றார்.
இப்படியான ஒரு சூழலில்தான் சசிகுமார் தனது குறள் சுடுமண் சிற்பப் பணியைத் தொடங்குகிறார். தேவையான களிமண்ணை மனோகரனின் ஒப்புதலுடன் கொண்டுவந்து கல்லூரி வளாகத்தில் இறக்குகிறார். தான் இதற்கு ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் உரிய தொகையை உடனடியாக வழங்க இயலாது எனவும் மனோகரன் கூறியுள்ளார். வண்டிக் கூலியை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சசிகுமார் மாணவர் களிடம் ரூ.5, 10 எனச் சேகரித்து வண்டிக்காரரை அனுப்பியுள்ளார். இதற்கிடையில் சசிகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை என ‘டிசம்பர் 12, 2010’ என்கிற தேதியிட்டு எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அவர் வீட்டிற்கு கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. தொலைபேசியிலும் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். கலக்கமடைந்த பெற்றோர்கள் சசிகுமாரைத் திட்டியுள்ளனர்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சசிகுமார் சென்ற பிப்ரவரி 26 அன்று வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரது கார் கண்ணாடி (கீவீஸீபீ ஷிநீக்ஷீமீமீஸீ)-ஐ உடைத்துவிட்டு ஓடியுள்ளார். இந்தத் தவறை அவர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
எனினும் இது குறித்து தற்போதைய பொறுப்பு முதல்வர் கூறுவது: ‘‘பிப்ரவரி 16ந்தேதி அன்றே அம் மாணவர் கல்லூரிக் கட்டடத்தில் ஒரு கண்ணாடியை உடைத்தார். நாங்கள் புகார் ஏதும் செய்யவில்லை. 19ஆம் தேதி அன்று களிமண்ணுக்காக ரூ.1600 அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த நாள் தேர்வுக் கட்டணம் கட்ட கடைசி நாள் என அம் மாணவர் கூறியதை ஒட்டி அன்று அப் பணத்தைத் தந்தோம். எனினும் 26ந்தேதி அம் மாணவர் கார்க் கண்ணாடியை உடைத்தார்.
பணம் கொடுக்கப்பட்ட பின்னும்  ஏன் அப்படி நடந்து கொண்டாய் என நாங்கள் வினவியபோது, ‘செய்த குறள் பலகைகளைச் சுடுவதற்கு சூளை இல்லை என்பதால் சொந்தமாக ரூ.4200 செலவு செய்து சூளை ஒன்று கட்டினேன். அந்தப் பணம் தரப்படவில்லை. தவிரவும் வீட்டுக்கு ஃபோனில் மிரட்டியதால் ஏற்பட்ட மனப்பாதிப்பினால் அப்படி நேர்ந்துவிட்டது’ என்று பதிலளித்தார்.
ஆசிரியர் மனோகரன் பெரியமேடு காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் ஒன்றை அளித்தார். கூடவே அவரைத் தூண்டிவிட்டதாக 2ஆம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்வந்திரன், நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் கமலஹாசன் என்கிற இரு தலித் மாணவர்கள் மீதும் புகாரளித்தார்.
காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இக் குற்றச்சாட்டை விசாரித்துள்ளனர். தற்போது வேறொரு வழக்கில் கொலையாளிக்கு  உதவிய தாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் முருசேன் மனோகரது சாதியைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது. எஸ்வந்திரனின் தம்பி ஆனந்தகுமார் அதே கல்லூரியில் நான்காமாண்டு பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டுள்ளார். அவரைப் பிடித்து சாதி சொல்லித் திட்டி அடித்த முருகேசன், அவரைக் கொண்டே அவரது அண்ணன் எஸ்வந்திரனை இரவு 1.30 மணி அளவில் கைது செய்து இருவரையும் கடுமையாக அடித்து, சாதி குறிப்பிட்டு இழிவாகப் பேசி இரவு முழுவதும் சங்கிலியால் பிணைத்து காவல் நிலையத்தில் வைத்துள்ளார். ‘‘தேவர் காரோட கண்ணாடியை உடைத்தவன்’’ என முருகேசன் இவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நாங்கள் காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபொழுது, முதல்வரின் காரை கொடூரமாக தாக்கியது குறித்து அளித்த புகாரில் எஸ்வந்த், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாலேயே அவர்களைத் தேட நேர்ந்தது எனவும் யாரையும் சங்கிலியால் பிணைத்து வைப்பது தமக்கு வழக்கமில்லை எனவும் மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார்.
அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு ‘‘கார் கண்ணாடியை உடைத்தவரைக் காட்டிக் கொடுத்தேன்’’ என எழுதி வாங்கிக் கொண்டு ஆனந்தகுமாரை விடுதலை செய்துள்ளனர். எஸ்வந்திரன் ‘ரிமான்ட்’ செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சசிகுமார், கமலஹாசன் ஆகிய இருவரும் முன் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
எஸ்வந்திரனும், ஆனந்தகுமாரும் பெரிய அளவில் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். எஸ்வந்திரன் தமிழக அளவில் ஒரு முக்கியமான சிற்பக் கலைஞர். அவரும் கமலஹாசனும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவர்கள் என்பதாலும், சில போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத் திருந்ததால்  மனோகரின் கோபத்திற்கு ஆளாகியிருந்துள்ளனர். மனோகரன் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு சிலையை மையமாக வைத்து ஒரு இந்து கோயிலை கட்டியதற்காகத் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே தன் பெயரை குற்றச்சாட்டில் சேர்த்தார் என்கிறார் கமலஹாசன். வளாகத்திற்குள் பழைய கிணறு ஒன்றை தூர்க்கும் முயற்சியையும் இவர் எதிர்த்துள்ளார்.  இதுவும் மனோகரின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது. தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் ‘‘பறப் பசங்களா’’ எனச் சொல்லி மனோகர் கடுமையாகப் பேசினார் என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எஸ்வந்திரன் இக்கல்லூரி மாணவராயினும் சில சிற்பப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போதைய பிரச்சினைகளில் தொடர்பில்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாங்கள் மனோகரிடம் கேட்டபோது ஒரு சதம் கூட இதில் உண்மையில்லை என மறுத்தார். தனிப் பயிற்சி நடத்துவது பற்றிக் கேட்டபோது பதவி உயர்வு பெற்றபின் கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதில்லை எனவும், எனினும் தனது மாணவர்கள் சிலர் அவ்வாறு நடத்துகின்றனர் எனவும் கூறினார்.
வழக்குரைஞர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறையுள்ள சிலரின் ஆலோசனைகளின்படி இவ்வாறு சாதி சொல்லித் தாக்கியதற்காகவும் பொய் வழக்கு போட்டதற்காகவும் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறைக்குத் தந்துள்ளனர். எனினும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததோடு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்த உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்டபோது, ஆனந்தகுமார் முதலில் கொடுத்த மனுவில் அதுகுறித்துப் பேசியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவும் பிறகு அளித்த மனுவிலேயே அதைக் கூறியுள்ள தாகவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க  றிக்ஷீவீனீணீ யீணீநீவீமீ  சான்றுகள் இல்லை எனவும் கூறினார். மாணவர்கள் கதவைத் தாழிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மிகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் திரும்பும்வரை காத்திருந்த மாணவர்கள் சென்ற மார்ச் 22 அன்று முதல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், மனோகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கிடையில் மனோகர் பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் பொறுப்பு முதல்வராக்கப்பட்டுள்ளார். இவர் நுண்கலைத் துறையைச் சார்ந்தவரல்லர். நிர்வாகத்துறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கிய வுடன் பெரிய அளவில் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். இரவில் மாணவிகள் உள்ளே அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை. 23ந்தேதி மாலை 6 மணி வாக்கில் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேரு ஸ்டேடியம் அருகிலுள்ள திடல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு 9 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கல்லூரி மூடிக் கிடக்கிறது.
எமது பார்வைகள்:
1. கலை பண்பாட்டுத்துறைச் செயலரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான வே. இறையன்பு அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபொழுது தான் பதவி ஏற்றபின் 1.86 கோடி ரூபாய் இக் கல்லூரிக்கென ஒதுக்கி, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார். க்ளெய்ன், மெடல் கேஸ்டிங், கம்ப்யூட்டர்கள், சூளை முதலியன தொடர்பாக வேலைகள் நடந்துள்ளதைப் பொறுப்பு முதல்வரும் குறிப்பிட்டார். மாணவர்கள் தன் கருத்துகளை ஏற்கவில்லை எனவும்,  இது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் துறையைச் சார்ந்ததால் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கல்லூரியைத் திறப்பது தாமதமாகக் கூடாது என நாங்கள் கேட்டுக்கொண்டபோது சற்று நிலைமை சீரானவுடன் கல்லூரியைத் திறப்பதில் தடையில்லை என்றார். மிகவும் விரிவாக எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.
2. பொறுப்பு முதல்வரும், ஆணையர் திரு. மணியும்கூட  மிகப் பொறுமையாக நாங்கள் முன் வைத்த ஐயங்களுக்கெல்லாம் விளக்கமளித்தனர். எனினும் சில ஐயங்களுக்கு உரிய விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.
அவை
(வீ) பொதுவாக அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையிலேயே பொறுப்புகள் அளிக்கப்படும். பணி மூப்புடைய வேறு சிலர் இருக்கையில் ஏன் மனோகருக்குப் பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது? கேட்டோம். மற்றவர்கள் மீது புகார்கள் இருந்தன என்றார் ஜெயபால். மனோகர் மீதும் புகார்கள் இருந்து சட்டமன்றம் வரை அது பேசப்பட்டது குறித்து பதிலில்லை.
(வீவீ) எந்த அடிப்படையில் ஒரு சில பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகவில்லை. சுரேந்திரன் என்பவர்  எம்.எஃப்.ஏ. சேர்ந்துவிட்டதால் பணியில் தொடர இயலாது என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எம்.எஃப்.ஏ.யில் சேரவே இல்லை.
(வீவீவீ) மனோகர் சாதி சொல்லித் திட்டியது, தனிப் பயிற்சி நடத்துவது குறித்து எதுவும் தமக்குத் தெரியாது என்று நிர்வாகத் தரப்பில் கூறுப்பட்டது.
(வீஸ்) விடுதி மூடப்பட்டதற்குக் காரணமாக மாணவர்களின் நடத்தை சரியில்லை எனக் கூறப்பட்டது. தவறுகள் இல்லாமல் கண்காணிக் கப்படுதல், முறையான வார்டன் ஒருவரை நியமித்தல் - முதல்வர் என்கிற வகையில்தான் பிரச்சினைகள் சமாளிக்கப்படவேண்டுமே ஒழிய அதற்காக விடுதியையே மூடுவது எப்படி?
3. மாணவர் சசிகுமார், தான் முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் ஆசிரியர்களும் நிர்வாகமும்தான் எந்தத் தவறையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எமது குழுவில் மூவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். கல்லூரிக் கதவுகளை உடைத்தல், ஆசிரியர்களைத் தாக்குதல், ஆசிரியர்களின் வாகனங்களை உடைத்தல், மாணவர்களுக்கிடையே மோதல் முதலான பல சம்பவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். மாணவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை போல அணுகுதல் அவசியம். பொருளியல் ரீதியாகப் பார்த்தால் ஆசிரியருக்கு ஏற்பட்டது கார் கண்ணாடி சேதமானது மட்டுமே. வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் அந்த மாணவனின் வாழ்வே பாழாகிவிடும் என்கிற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கல்லூரி நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் கூட்டம் முதலியவற்றைக் கூட்டி விவாதித்து, அம் மாணவனை தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக்குழு அமைத்து, குற்றத்திற்குப் பொருத்தமான அபராதம் முதலான தண்டனை அளித்து, எச்சரிக்கை செய்து பிரச்சினையை முடிப்பதே வழக்கம். இங்கோ உடனடியாக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதத்துடன் ஆசிரியர் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டியுள்ளார். தொடர்பில்லாத இரு தலித் மாணவர்களையும் புகாரில் இணைத்துள்ளார். அடுத்து நான்கு நாட்கள் கழித்தே (மார்ச் 1) இது தொடர்பாககக் கல்லூரியில் கூடி விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை முற்றியிருக்காது.
4. மாணவர்கள் போராடுவதை ஒழுக்கக் குறைவாகக் கருத வேண்டியதில்லை. போராட்ட காலங்களில் பேசப்படும் சொற்களையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் அத்தகைய போக்கு நிர்வாகத்திடம் உள்ளது.
5. சசிகுமார் இந்த நிலைக்குத் தள்ளப் பட்டதற்குக் காரணம், இது போன்ற மாணவ முயற்சிகள் குறித்த ஒரே சீரான அணுகுமுறை இல்லாததே காரணம்.
எமது பரிந்துரைகள்:
1. அகமதாபாத்திலுள்ள ழிமிஞி (தேசிய வரைகலை நிறுவனம்) போல பெருமை மிகு நிறுவனமாக வளர்ந்திருக்க வேண்டிய கல்லூரி இது. மாற்றாந்தாய் அணுகல் முறையுடன் அரசு நடந்து கொண்டு வந்துள்ளதே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அக்கறையுள்ள முதல்வர் கலைஞர் மற்றும் நாடறிந்த எழுத்தாளரும் நிர்வாகியுமான இறையன்பு ஆகியோரின் துறையைச் சார்ந்த இந் நிறுவனம் போதிய நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகள் நீக்கப்பட்டு இந்திய அளவில் தரமான ஒரு நுண்கலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட வேண்டும்.
2. ழிமிஞி முதலான நிறுவனங்களின் தரநிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்பட்டு, எல்லோருக்கும் ழிமிஞி ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும்.
3. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் விடுதி திறக்கப்பட வேண்டும். கல்லூரிக்குள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
4. மூடிக் கிடக்கும் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.
5. பிப்ரவரி 26ந்தேதி நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.
6. கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத தலித் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டி, சங்கிலியால் பிணைத்து அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
7. சமீபத்திய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட உள்ளதை வரவேற்கிறோம். அந்த ஆணையத்தின் விசாரணை எல்லை கீழக்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்.
(வீ)  26ந்தேதி நிகழ்வை நோக்கிப் படிப்படியாக இட்டுச்சென்ற சூழல் அடையாளம் காணப் படுதல்.
(வீவீ) பணி மூப்பு புறக்கணிக்கப்பட்டு மனோகர் பொறுப்பு முதல்வராக்கப்படுதலின் பின்னணி.
(வீவீவீ) கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத மாணவர்கள் மீது புகார் சொல்லப்பட்டது மற்றும் அவர்கள் இத்தனை மூர்க்கமாக நடத்தப்பட்டது ஆகியவற்றிற்குப் பின்புலம் ஏதும் இருந்ததா எனக் காணுதல்.
(வீஸ்) மனோகர் மீது 2004இல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தொடர்ந்து அவர் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டார் என மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்தல்.
குறிப்பாக கார் கண்ணாடி உடைக்கப்பட்ட அன்று அவர் சாதி சொல்லித் திட்டியது குறித்த புகாரில் கையொப்பமிட்டுள்ள மாணவர்கள் விசாரிக்கப்படுதல்.
(ஸ்) பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட பணி நீக்கங் களில் பின்னணி ஏதும் உள்ளதா என ஆராய்தல்.
(ஸ்வீ) ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துதல், ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செயல்படுத்துதல் ஆகியன எந்த அளவிற்குக் கல்விப் பணிகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்தல்.
(ஸ்வீவீ) ஆசிரியர்களுக்கிடையே உள்ள குழு மனப்பான்மை மாணவர்களின் கல்வியைப் பாதித்தல் குறித்து ஆராய்தல்.
8. தனிநபர் ஆணையம் அளிக்கும் பரிந் துரையின் அடிப்படையில் குற்றமிழைத்த வர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதற்கு நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.
9. தனிநபர் ஆணையம் அமைக்கும்போது அந்த நபர் சமூகநீதியில் அக்கறையுள்ளவராகவும் நடுநிலையோடு இருப்பவராகவும் இருப்பது அவசியம்.


சென்னை நகரின் பழம்பெருமை மிக்க கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராடுவது, அதைத் தொடர்ந்து காலவரையறையின்றி அக்கல்லூரி மூடப்பட்டது ஆகியவற்றைக் கண்டு கவலையுற்ற சமூக அக்கறைமிக்க மனித உரிமை ஆர்வலர்கள் உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து வெளியிட்ட அறிக்கை.
உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் : பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், முனைவர் பா. சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கல்லூரி. பேரா.மு. திருமாவளவன், முன்னை பொறுப்பு முதல்வர், அரசு கல்லூரி. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி, அயன்புரம் இராசேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே. குட்டி ரேவதி, கவிஞர், உதயம் மனோகரன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், முருகன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம், சுகுமாரன், தொழிலாளர் ஒற்றுமை முன்னணி, சென்னை, வெங்கட், ஆய்வு மாணவர், எம்.ஐ.டி.எஸ், சென்னை.


..................



இரண்டு  கவிதைகள்

ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு,
தொடர்ச்சியாக கிடைக்கும் குறும்பட விருதுகள், கவிதை மற்றும் மிகப்பெரிய கவிதை வாசிப்பு நண்பர்கள் வட்டம், இயக்குனர் முயற்சி என வேலை பளுவில் இருக்கும் லீனா மணிமேகலை உலகின் அழகிய முதல் பெண் என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த சர்ச்சை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அந்த கவிதைகள் சில இங்கே இடம் பெறுகிறது.




1

நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்
அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்
எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்
பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை

2.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்
கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்

முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்
பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்
கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

நன்றி: மணல் வீடு



...............


தண்டனை மேலும் தண்டனை


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றதில் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் நளினி. மேலும் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆயுள் (வாழ்நாள்) தண்டனை என்பதை பதினான்கு ஆண்டுகளைக் கடத்திய கைதிக்கு நீதியின் விதிப்படி கருணையின் அடிப்படையில் விடுதலை அளிக்கலாம் என்கிறது சட்டம். ஆனால் அது பற்றி மனு அளித்தும் கவனிக்கப்படாமல் பதினெட்டு ஆண்டுகளையும் கடந்தும் தண்டனையை அனுபவித்து வருகிறார் நளினி.  நளினியின் தண்டனை நீடிப்பது ஏன் என்று தமிழ் சான்றோர்கள், மனித உரிமையினரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
பல்வேறு காரணங்களுக்கிடையிலும், கொலை யுண்ட ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா நளினியைச் சிறையில் சந்தித்தது நளினியின் விடுதலைக் குறித்து சிறிது நம்பிக்கையை அளித்தது என்றே கூறலாம். ஆனால் நடந்தது என்னவோ வேறு.
பதினெட்டு  ஆண்டுகளைக் கடந்தும்     தண்டனையை அனுபவித்துவரும் நளினி, தன் குழந்தைக்காகத் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் தனது விடுதலையை நிராகரித்த ஆலோசனைக் குழு, சரிவர உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சென்ற மார்ச் 11ஆம் தேதியன்று தமிழக அரசால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நளினியை விடுவிக்காததற்கு எட்டு காரணங்களை அடுக்கியுள்ளது குழு. அவை,
1. நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார்.  முக்கிய    குற்றவாளி களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
2. நளினியின் மனப்பான்மை மாற வில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
3. நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்து தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம்.
4. நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள்.  அது வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடம். அமெரிக்கத் தூதரகம் போன்ற முக்கிய மானஅலுவலகங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கி னால் சட்டம் _ ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும்.
5. ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
6. 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக,   முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
7. இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவை களை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியேஅவரை விடுதலை செய்ய முடியாது.
8. அவரைப் பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.
இதில் கூறப்பட்ட காரணங்களுள் ஒன்று ‘நளினியின் மனப்பான்மை இன்னும் மாறவில்லை’ என்று மனநல மருத்துவர் அளித்த சான்று. அவர், நளினியை விடுதலை செய்ய லாம் என்று உறுதியாகக் கூறவில்லையாம். அதோடு மத்திய புலனாய்வுத்துறை விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றவர் பொது மன்னிப்பிற்கு உடையவர் அல்லர் என்றும் தெரிவித்துவிட்டது. எனவே மனுவை நிராகரித்துள்ளது நீதிமன்றம்.
பல லட்சம் தமிழர்களைக் காவு கொண்ட ஈழப்போரைக் கண்டும் காணாது தம் ஆட்சியை ஏகபோகமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு நளினியின் விடுதலையை எங்கே கருத்தில் கொண்டுவிடப்போகிறது?
நளினி விடுதலை என்பது அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து, வேறு எவ்வித வழியும் இல்லாமல் தண்டனையை அனுபவிக்கும் நளினி, மேலும் கடந்த 13ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார். சட்டம் என்ன பதில் சொல்லப் போகிறது?


................


விளிம்பின் மையம் தேடும் மொழி

நூலின் ஆசிரியரான ந.சீனிவாசன் ஒவ்வொரு கவிதையிலும் ஏதோ ஓர் தேடலை உள்ளடக்கியே கவிதை புனைந்துள்ளார். அத்தேடலானது அலையின் தேடலையொத்த அவாவோடு தான் தொக்கி நிற்கிறது. இக்கவிதை நூலினை வாசிக்கும் அனைவரிடமும் தொக்கி நிற்கும் அத்தேடலின் தாக்கத் தினையே ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது ஒவ்வொரு கவிதை வரியும்.
நூலின் தொடக்கத்திலேயே தாம் வணங்கும் கடவுளுக்கு எழுத்துக்களாலான மாலையைச் சூட்டுவதோடு, மாணவர்கள், கல்வியைப் போதிக்கின்ற ஆசிரியருக்குச் சரியான மரியாதையைச் செலுத்தாத இக்காலத்தில் தமக்கு கல்வியும் ஒழுக்கமும் போதித்த குருவுக்கு முன்னுரிமை தந்துள்ளமை கவிஞரின் மீது நமக்கு மரியாதையையே ஏற்படுத்துகிறது.
இக்கவிஞரின் கவிதைகளில் துளிர்த்தோடும் மனிதநேயமும், மாண்பும் நூலை வாசிக்கும் அனைவரையும் அதே உணர் வோடுதான் அக்கவிதைகளை அணுகச் செய்கிறது. வேலை தேடிக் காத்திருப்போராகட்டும், தாம் பிறந்த மண்ணை விடுத்து வாழ்வின் தேவைக்காக அயல்நாடுகளில் வாழ நேர்ந்தவர்களின் துன்பமாகட்டும் எதுவொன்றுமே நம் உணர்வுகளை அசைத்துவிட்டுத்தான் கடந்து செல்ல முடிகிறது.
‘‘உன் உணவில் பங்குபோடும்
காகம் போல்
உன்னோடு பேசிடும்
கிளியைப் போல்
உன்னோடு விளையாடும்
ஆட்டுக் குட்டிபோல்
என்னையும்
சேர்த்துக்கொள்வாயா?’’
என்று பிரிய நேரிட்ட தம் மழலையிடம் இறைஞ்சும்  தந்தையின் சோகத்தைக் கவிதையில் காணும்போது இக்கவிஞரின் உணர்வு, அக்குழந்தையைவிட மென்மையானதாக மாறி நம்மையும் சோகமூட்டுவதாகவே உள்ளது.
காதலைப் பற்றிப் பேசும் கவிதைகளும் சில இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கவிஞரின் காதல் மொழி ‘ஒருமுறை வந்தால் திரும்பிச் செல்லாது’ என புதிய கண்ணோட்டத்தோடும் வலியோடும் கடக்கிறது.
ஆங்காங்கே ஓரிரு எழுத்துப் பிழைகள் காணப்படினும் நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் செவ்வனே அமைக்கப்பட்டு இந்நூலுக்கு சிறப்பையே தந்துள்ளது.
கரையைத் தேடும் அலைகள்; ந. சீனிவாசன்; குறிஞ்சி வெளியீடு; வாடிமாநகர், கொத்தமங்கலம் (அஞ்சல்), ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை - 614 624. விலை ரூ.50


...................


தமிழ் சினிமா செய்திகள்


சூர்யா ஜோடியாக தமிழ் படத்தில் அறிமுகமாகிறார் கமல் மகள் ஸ்ருதி.  ஏற்கனவே இந்தி, தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
இந்தி கஜினி வெற்றிக்குப் பின் இப்படத்தை முருகதாஸ் இயக்குவதால் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
தமிழில் முன்னணியில் இருந்த நடிகை அசின் ‘கஜினி’ மூலம் இந்திக்குப் போனார். அப்படம் வெற்றிகரமாக ஓடியதால் ஒரே படத்திலேயே அங்கு நம்பர் ஒன் நடிகையானார். கஜினி ஹீரோ அமீர்கானை அசின் காதலிப்பதாக கிசுகிசுக்களுக்கு  இருவரும் அவசரஅவசரமாக மறுத்தனர்.
இதற்கிடையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேசை அசின் காதலிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள பைவ் ஸ்டார் ரெஸ்டாரண்டில் தனியாக சந்தித்து நெருக்கமாக உட்கார்ந்து  பேசியுள்ளனர்.
நயன்தாரா தமிழில் ஆர்யா ஜோடியாக ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ‘சிம்கா’ மற்றும் பெயரிடப்படாத மலையாள படமொன்று என மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபுதேவாவுடனான காதல் ‘கிசுகிசு’க்களும் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் தற்போது பேட்டியளித்துள்ள நயன், காதல் திருமணத்தை நான் எதிர்க்க மாட்டேன். பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு ஒரு வேளை காதல் திருமணம் நடந்தால் அது என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணன் போன்றோரின் சம்மதத்துடன் தான் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்குத்தி அணிந்ததில் கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கினார்கள்.
ஆரம்பத்தில் வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என் பெற்றோர் என்னை நம்புகிறார்கள். சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக்க பழகிக்கொண்டேன் என்றார் தத்துவத்தோடு.
இந்தி ‘காட்டா மீட்டா’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா, கமலின் புதுப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.  ஆரம்பத்தில் இருந்த தன்னையொத்த பல நடிகைகள் காணாமல் போய்விட்டனர். ஆனால் திரிஷா கடந்த ஒன்பது ஆண்டுகளாக சினிமாத்துறையில் நிலைத்து நின்று புகழை அடைந்து வருகிறார். இதற்கான காரணமாக ‘நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதால்தான் பட உலகில் 9 ஆண்டுகள் நிலைத்து நிற்பதாக’க் கூறுகிறார். தன்னைப் பற்றிய கிசுகிசுக்கள் வரும்போது குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து படித்துச் சிரித்துவிட்டு பிறகு அதை மறந்து விட்டு வேலையைத் தொடர்வதால் இத்துறையில் நீடிக்க முடிகிறது என்றும் கூறுகிறார்.
சிக்கல்களில் மாட்டினால் கடவுளையும் அம்மாவையும் மட்டுமே நம்புவதாகவும் அவர்களே அச்சிக்கலில் இருந்து வெளியே கொண்டு வருவார்கள் என்றும் கூறுகிறார். பிழைக்கத் தெரிந்த பிள்ளை.
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் முன்னணி நடிகராக உள்ளார். ‘காஞ்சிவரம்’ படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
பிரகாஷ்ராஜ்_போனிகபூர் இடையே மீண்டும் உறவு வலுத் துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்களாம். விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்தத் திருமணத்துக்கு போனி கபூர் வீட்டில் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சமரசமாகி பச்சைக்கொடி காட்டியுள்ளனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடக்கிறது.
ஸீ



....................

No comments:

Post a Comment